பிரதமர் மோடி தடுக்க வில்லையா? அல்லது தடுக்க விரும்பவில்லையா? - ராகுல் காந்தி கேள்வி

பிரதமர் மோடி தடுக்க வில்லையா? அல்லது தடுக்க விரும்பவில்லையா? - ராகுல் காந்தி கேள்வி

ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவு முறைகேடுகளை பிரதமர் மோடி தடுக்க வில்லையா? அல்லது தடுக்க விரும்பவில்லையா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

''ரஷ்யா - உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் வேளையில், சொந்த நாடான இந்தியாவில் வினாத்தாள் கசிவைத் தடுக்க முடியவில்லையா? அல்லது தடுக்க விரும்பவில்லையா?

மற்ற அரசு அமைப்புகளை எப்படி பாஜகவினர் கைப்பற்றி இருக்கிறார்களோ அதே போல கல்வி நிறுவனங்களையும் அதன் அமைப்புகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

துணைவேந்தர்கள் தொடங்கி முக்கிய அதிகாரிகள் வரை பாஜகவை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதால் தான் இதுபோன்ற முறைகேடுகள் அரங்கேறுகிறது.'' என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags

Next Story