ஆம் ஆத்மிக்கு வாக்களித்த ராகுல் காந்தி, சோனியா காந்தி!

ஆம் ஆத்மிக்கு வாக்களித்த ராகுல் காந்தி, சோனியா காந்தி!

 ராகுல் காந்தி, சோனியா காந்தி

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 25) பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 15 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் டெல்லியில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதைத்தொடர்ந்து இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர். பின் வாக்குச்சாவடிக்கு வெளியில் வந்த இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதுவரை ராகுல் காந்தி, சோனியா காந்தி வாக்களிக்கும் இடங்களில் காங்கிரஸ்தான் போட்டியிடும். அனால் இந்தமுறை புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார். ஆகவே ராகுல் காந்தி, மற்றும் அவரது தாய் சோனியா காந்தி ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

Tags

Next Story