"மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்" - ஆர்.கே.செளத்ரி கடிதம்?

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் - ஆர்.கே.செளத்ரி கடிதம்?

ஆர்.கே.செளத்ரி

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

''சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்.'' என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், செங்கோலை அகற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர். அதனடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்படும் என பாஜக எம்பிக்களிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Tags

Next Story