டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

மணீஷ் சிசோடியா

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், “இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. நான் முன்பே கூறியது போல் இந்த வழக்கில் உண்மை, ஆதாரம் இல்லை. எங்கள் தலைவர்கள் வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டனர். மணிஷ் சிசோடியாவும் சிறையில் அடைக்கப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். எங்களுக்கு நீதி கிடைத்ததற்கும், ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததற்கும் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி கூறுகிறேன். அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் விரைவில் வெளியே வர வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மத்திய அரசின் சர்வாதிகாரத்தின் மீது அறைந்த அடி இது.

ஆம் ஆத்மி கட்சிக்கும், டெல்லி மக்களுக்கும் பெரும் நிம்மதியை இந்த தீர்ப்பு அளித்துள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோருக்கு நீதிக்கான பாதை விரைவில் திறக்கப்படும். மணிஷ் சிசோடியாவின் 17 மாத வாழ்க்கை வீணாகிப் போனது குறித்து நாட்டின் பிரதமர் கணக்கு சொல்வாரா? மணிஷ் சிசோடியா வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. இது ஆம் ஆத்மி கட்சியினருக்கு மிகப் பெரிய நிவாரணம். விரைவில் எங்கள் இரு தலைவர்களும் வெளியே வருவார்கள்” என்று தெரிவித்தார்.

Tags

Next Story