30 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவிப்பை வெளியிட்ட சீன உள்துறை அமைச்சகம்!

30 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவிப்பை வெளியிட்ட சீன உள்துறை அமைச்சகம்!

இந்தியா

அருணாச்சல் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவிப்பை வெளியிட்ட சீன உள்துறை அமைச்சகம்.

இந்தியாவின் அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், மலைகள், ஆறுகள், ஏரிகள் என சுமார் 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்து சீன அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அருணாச்சல் பிரதேசத்தை 'Zangnan' என குறிப்பிடும் சீனா, திபெத்திய தன்னாட்சி மாகாணத்தின் ஒருபகுதியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 5 முறை அருணாச்சல் பிரதேசத்தை 'சீன பகுதி' என குறிப்பிட்டு சீன வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள் தொடர்ந்து பதற்றத்தை கிளப்பி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story