அடுத்த டார்கெட் மு.க.ஸ்டாலின் தான்... அர்விந்த் கெஜ்ரிவால் பேச்சு !

அடுத்த டார்கெட் மு.க.ஸ்டாலின் தான்... அர்விந்த் கெஜ்ரிவால் பேச்சு !

அர்விந்த் கெஜ்ரிவால் 

டெல்லியில் மதுபானை கொள்ளை முறை கேடு வழக்கில் கைதாகி இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஆம் ஆத்மி கட்சி ஒரு சிறிய கட்சி, நாங்கள் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறோம். ஆனால், பிரதமர் எங்கள் கட்சியை முடக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஒரே நேரத்தில் நான்கு ஆம் ஆத்மி தலைவர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பினார். கட்சியின் நான்கு முக்கிய தலைவர்கள் சிறைக்கு அனுப்பினால் கட்சியே முடிந்துவிடும் என்று பிரதமர் நினைக்கிறார். ஆனால், ஆம் ஆத்மி அப்படிப்பட்ட கட்சி இல்லை.. ஆம் ஆத்மி கட்சிதான் நாட்டிற்கு எதிர்காலத்தைத் தரும் என்பதைப் பிரதமர் மோடியே உணர்ந்து கொண்டு உள்ளார் என்பதையே இது காட்டுகிறது.

மோடி மீண்டும் வெற்றி பெற்றால் மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் ,பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த 2 மாதங்களில் உத்தரபிரதேச முதல்வரையும் அவர்கள் மாற்றி விடுவார்கள்.

ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டுமானால் இந்த கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி கற்றுக் கொள்ள வேண்டும்.'' என பேசினார்.

Tags

Next Story