''நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை'' - மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை - மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிவு என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தேசிய தேர்வு முகமை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அது மிகவும் நம்பகமான அமைப்பாகும். நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story