திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் பலி - மோதலில் பலியான சம்பவத்தால் மேற்குவங்கத்தில் பரபரப்பு !!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் பலி - மோதலில் பலியான சம்பவத்தால் மேற்குவங்கத்தில் பரபரப்பு !!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

லோக்சபா தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் பலியான சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைப்பெற்று வரும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 5 கட்ட வாக்கு பதிவு நடக்கவுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பகுயாட்டி அர்ஜுன்பூர் பகுதியில் நேற்று இரவு பெரும் மோதல் ஏற்பட்ட நிலையில் தகவல் அறிந்து போலிசார் வந்துள்ளனர். பின்னர் போலிசார் அங்கிருந்து சென்றதும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் செங்கல் மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கிக் கொண்ட நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சஞ்சீவ் தாஸ் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர்.

இந்த மோதலில் பலியான சஞ்சீவ் தாஸ் குடும்பத்தினர் இது திட்டமிட்ட கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் விவகாரத்தில் 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து கொல்கத்தாவில் ஆனந்தபூர் பகுதியில் பாஜக நிர்வாகியான சரஸ்வதி சர்க்கார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதனால் காயமடைந்த சரஸ்வதி சர்க்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story