வயநாடு நிலச்சரிவு- பிரதமர் மோடி இரங்கல்

வயநாடு நிலச்சரிவு- பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு தொடர்பாக பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்கள் வேதனையை பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ''வயநாடு நிலச்சரிவு சம்பவம் மிகவும் வேதனையை அளித்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி அன்புக்குரியவர்களை இழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி அனைத்து உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்தேன். தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story