எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு !

எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு !

கர்நாடகா உயர்நீதிமன்றம் 

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேவைப்பட்டால் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எடியூரப்பா மீது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சதாசிவம் நகர் போலீசார் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்தனர்

இதனிடையே தம் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் தமக்கு முன் ஜாமீன் கோரி எடியூரப்பா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story