மீன்பிடி வலைகள், மீன்பிடி பரிசல் வாங்க 50% மானியம்

மீன்பிடி வலைகள், மீன்பிடி பரிசல் வாங்க 50%  மானியம்

ஆட்சியர் ச.உமா

ஆட்சியர் ச.உமா தகவல்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2023-2024 ம் ஆண்டு சட்ட மன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் 05.04.2023 அன்று உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாக, உள்நாட்டு மீனவர்களுக்கு 50% விழுக்காடு மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலைகள் மற்றும் பரிசல்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20,000/-ல் 50% மானியமாக ரூ.10,000/- மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20,000/-ல் 50% மானியமாக ரூ.10,000/- வழங்கப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்குள் வலை மற்றும் பரிசல்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வாங்கும் வலை மற்றும் பரிசல்கள் உரிய ஆய்வுக்குப் பின்னரே மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

எனவே. மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்வள ஆய்வாளர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்.10 தொலைப்பேசி எண்:04298 – 244045, 93848 24363 மற்றும் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 31.08.2023-க்குள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story