எருமப்பட்டியில் ஆறுநாட்டு வேளாளர் பொதுக்குழு கூட்டம்

எருமப்பட்டியில் ஆறுநாட்டு வேளாளர்  பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவில் உள்ள சிந்தாமணி மகாலில் ஆறுநாட்டு வேளாளர் 79 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் செல்வராஜ் பிள்ளை தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் புரவி மற்றும் மாநில பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முதலில் மாநில தலைவர் செல்வராஜ் பிள்ளைக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் மாநில நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போடிநாயக்கன்பட்டி பொட்டிரெட்டிப்பட்டி கூலிப்பட்டி பொம்ம சமுத்திரம் பிப்ரமகாதேவி புதுப்பட்டி ஆலம்பட்டி மருதம்பட்டி கோனானூர் எருமைப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்தும் நாமக்கல் நகரம் மற்றும் சேலம் மாநகரத்தில் வசிக்கும் ஆறுநாட்டு வேளாளர் சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் எருமப்பட்டி ஒன்றிய குழு துணை சேர்மன் லோகநாதன் ஒன்றிய கவுன்சிலர் ராஜ்குமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story