பஸ் ஸ்டாப்பை தூய்மை படுத்திய பா.ஜ.க.வினர்

பஸ் ஸ்டாப்பை தூய்மை படுத்திய பா.ஜ.க.வினர்

தூய்மைப் பணி 

குமாரபாளையம் அருகே பஸ் ஸ்டாப்பை பா.ஜ.க.வினர் தூய்மை படுத்தினர்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்திரவின்படி, பா.ஜ.க.வினர் அந்தந்த பகுதி பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளுங்கள் என்றதன்படி,குமாரபாளையம் பா.ஜ.க.வினர் மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில், கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் கட்சியினர் பஸ் நிறுத்தத்தில் இருந்த பழைய சாமான்கள் அகற்றி, ஒட்டடை அடித்து, தூய்மையாக பெருக்கி, சாணம் போட்டு பூசியும் விட்டனர். இவர்கள் சேவையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். இதில் நிர்வாகி ராஜா, சரவணன், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இது போல் ஒவ்வொரு பகுதியும் தூய்மை பணி மேற்கொள்வோம் என பா.ஜ.க.வினர் கூறினர்கள்.

Tags

Next Story