வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

வழக்கறிஞர்கள் சங்க  புதிய நிர்வாகிகள் தேர்வு

புதிய நிர்வாகிகள்

ராசிபுரம் தாலுக்கா சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கிரிமினல் & சிவில் நீதிமன்றத்தில் தலைவர், கௌரவத் தலைவர், பொதுச்செயலாளர், செயலாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர், இணைச்செயலாளர், உதவி செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் உறுப்பினர்கள் பொறுப்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் பி. காமராஜ், கௌரவ தலைவர் ஆர். சீனிவாசன், பொதுச் செயலாளராக வழக்கறிஞர் ஆர்.கே. டி .தங்கதுரை, செயலாளர் வழக்கறிஞர் டி .ஆர். பிரபு, துணைத் தலைவர் வழக்கறிஞர் பி. ஹரிஹர சுதன், உதவித் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், சேர்மன் ஷ. எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி என். செல்வகுமார், துணைச் செயலாளர் கே. பூபதி, இணைச்செயலாளர் என். சேகர், உதவி செயலாளர் கே. செங்குட்டுவன், பொருளாளர் என்.முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் எஸ். முருகேசன், என்.பாபு, பி. வடிவேல், வி. தேவராஜன், எஸ். கண்ணன், எஸ். கங்காதரன், என். கோகுல கண்ணன், எஸ். கார்த்திகேயன், எம் .சுப்பிரமணி, பி. ராதா, ஏ. செல்வம், பி. கிருஷ்ணமூர்த்தி, சி. வினோத், பி. ரவிக்குமார், டி. கீதாலட்சுமி, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து கௌரவித்தனர். மேலும் இவர்களுடன் கிரிமினல் கோர்ட் தலைவர் வழக்கறிஞர் எம். வாசுதேவன், மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story