நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தனிநபர் இல்ல குடிநீர் வழங்கும் பணி துவக்க விழா

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தனிநபர் இல்ல குடிநீர் வழங்கும் பணி துவக்க விழா

துவக்க விழா 

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் K.R.N.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வலியுறுத்தியதின் படி பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா நடைபெற்றது. கார்கூடல்பட்டி ஊராட்சியில் பாலிகாடு ரோடு மாரியம்மன் கோவில் வீதியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பிலிப்பாக்குட்டை சமத்துவபுரத்தில் JJM திட்டத்தில் ரூ. 10.98 லட்சம் மதிப்பில் 100 வீடுகளுக்கு தனிநபர் இல்லக் குடிநீர் வழங்கும் பணி, கார்கூடல்பட்டி பகுதியில் JJM திட்டத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 100 வீடுகளுக்கு தனிநபர் இல்லக் குடிநீர் வழங்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை போடும் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. .

இதில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் K.P.இராமசுவாமி தலைமை தாங்கி, பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக பொருளாளர் தன்ராஜ் , செந்தில், திமுக நிர்வாகிகள் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பழனிசாமி, நந்தகுமார், ரமேஷ், மணிகண்டன், சாதிக் பாட்சா, ராகவன் வார்டு உறுப்பினர் செல்வம், கிளை செயலாளர்கள் சிகாமணி, குமரேசன், சக்திவேல், முருகேசன், ரவி சுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story