தடையில்லா சான்று பெறாமல் கரும்பு விற்பனை : மேலாண் இயக்குனர் எச்சரிக்கை.

தடையில்லா சான்று பெறாமல் கரும்பு விற்பனை : மேலாண் இயக்குனர் எச்சரிக்கை.

எச்சரிக்கை.

கரும்பை தடையில்லா சான்று பெறாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலாண் இயக்குனர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து, ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள , கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023–24 ம் ஆண்டு அரவை பருவத்திற்கு, 4,270 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு, 2 லட்சம் டன்கள் கரும்பு அறவை வரும், நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. இதுவரை கரும்பு பதிவு செய்யாத அங்கத்தினர்கள், சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாத கரும்பை, முறைகேடான வகையில் வெளிச் சந்தையிலோ, வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ அல்லது தனியார் சர்க்கரை ஆலைக்கோ, தடையில்லா சான்று பெறாமல் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வதாக ஆலை நிர்வாகத்திற்கு புகார்கள் வரும் பட்சத்தில், முறைகேடுகளில் ஈடுபடும் இடைத்தரகர்கள், வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது, கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story