அம்மனுக்கு பூச்சாட்டு விழா

அம்மனுக்கு பூச்சாட்டு விழா

பூச்சாட்டு விழா

ஸ்ரீமகா முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பூச்சாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிழக்கு தெரு இந்திரா காலனி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஐப்பசி மாதம் பூச்சாட்டுதல் விழா சிறப்பாக நடைபெறும் அதன்படி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் க்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து இந்த பகுதி பொதுமக்கள் ஊர்வலமாக பூந்தட்டு தேங்காய் பழம் உள்ளிட்ட பொருட்களுடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் பூச்சாற்றுதல் விழாவை முன்னிட்டு தங்களது வேண்டுதல்கள் வைத்து ஸ்ரீ மகா முத்து மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாரணை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story