மருது பாண்டியர்கள் தேவர் பக்தர்கள் சார்பில் முப்பெரும் விழா

மருது பாண்டியர்கள் & தேவர் பக்தர்கள் குழு சார்பில் நடைபெற்ற முக்குலத்தோரின் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி அருகே ஏபிடி ரோடு சாலையில் மருதுபாண்டியர் தேவர் பக்தர்கள் குழு சார்பில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர்கள் 222 வது குருபூஜை விழா மற்றும் பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அ.ம.மு.க. முன்னாள் பகுதி செயலாளர் ஏ பி டி ரோடு சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அன்னதான விழாவினை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் நொய்யல் பகுதி கழக செயலாளர் சித்திக் பாய், துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் கார்த்திக்.சுவை பாலு தேவர். சாய் சுந்தரதேவர்,விக்னேஷ், மாலை பாண்டி, லட்சுமணன், உள்ளிட்ட தேவரின தலைவர்கள் ஊர் பொதுமக்கள் என பெரும் திரளானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story