குழந்தைகள் மையத்தில் சூழ்ந்த மழைநீர்

குழந்தைகள் மையத்தில் சூழ்ந்த மழைநீர்

குழந்தைகள் மையத்தை சூழ்ந்த மழைநீர்


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதல் தற்போது வரை பெய்து வரும் மழையால் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் மையம் சுற்றியுள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

வருடம் தோறும் மழை காலங்களில் குழந்தைகள் மையத்தில் வரும் குழந்தைகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் உடனடியாக மழைநீரை அகற்றி நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags

Next Story