அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

பேருந்து கவிழ்ந்து விபத்து.அதிர்ஷடவசமக உயிர் தப்பிய பயணிகள்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 34 அரசு பேருந்து உள்ளது.வால்பாறையில் இருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சென்று வருகிறது.இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று வந்தது.பேருந்தை ஓட்டுநர் வெங்கடேஷ்குமார் மற்றும் நடத்துநர் பாலு என்பவர் ஒட்டி வந்தனர்.

பேருந்தில் 11 பயணிகள் வால்பாறைக்கு பயணித்து நிலையில் சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு சுவரை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 11 பேர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக கூறப்படும் நிலையில் விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story