அம்மையாண்டியில் அங்கன்வாடி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா 

அம்மையாண்டியில் அங்கன்வாடி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா 

அடிக்கல் நாட்டு விழா 

அம்மையாண்டியில் அங்கன்வாடி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், அம்மையாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில், அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவி, சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன் முன்னிலை வகித்தார்.

இதில், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், இளைஞர் அணி அரவிந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, ஒன்றியப் பொறியாளர் பாரதிதாசன், பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியை கலா, கிராம பிரமுகர்கள் மல்லிகை சிதம்பரம், நீலசுந்தரம், முத்துராமலிங்கம், ஊராட்சி செயலர் செந்தாமரை மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story