போலீஸ் நிலையத்தில் நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

போலீஸ் நிலையத்தில் நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி
போலீஸ் நிலையத்தில் நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சமடைந்தார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி சரல்விளை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 36) பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சகாய அஸ்வினி (22). இவர் தலக்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் திடீரென வீட்டில் இருந்து மாயமானார்கள். இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் நேற்று இரவு சகாய அஸ்வினி, சாமிநாதனுடன் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் முன்னிலையில் ஆஜராகி, தான் சாமிநாதனை காதலித்து வந்ததாகவும்

தற்போது களக்காடு அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் வாழ்ந்தால் சாமிநாதன் உடன் இணைந்து வாழ்வேன் என்று உறுதியாக கூறினார். போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story