திருப்புவனத்தில் பரவலான மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்புவனத்தில் இரண்டு மணி நேரமாக பரவலாக மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சிறிது நேரத்தில் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. இந்த மழையால் கிராம பகுதியில் உள்ள சாலைகள் வயல்வெளி பகுதியில் தண்ணீர் தேங்கியது. பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

மேலும் கனமழையால் குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story