மானாமதுரை வைகை ஆற்றில் குப்பையை எரிக்கும் நகராட்சி ஊழியர்கள்

மானாமதுரை வைகை ஆற்றில் குப்பையை எரிக்கும் நகராட்சி ஊழியர்கள்
புகையால் பொதுமக்கள் பாதிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி 27 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை மாங்குளம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் குப்பை கிடங்கு தொலைவில் இருப்பதால் நகராட்சி ஊழியர்கள் அனைத்து குப்பையையும் அங்கு கொண்டு செல்வதில்லை. நகரையொட்டி வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அரசகுழி மயானம் செல்லும் பாதையில் வைகை ஆற்றில் குப்பையை கொட்டி எரித்து வருகின்றனர். இதனால் சுந்தரபுர அக்ரஹாரம், செட்டியதெரு பகுதி மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் கடந்த செப்டம்பரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது‌. ஆனால் நகராட்சி ஊழியர்களே வைகையாற்றில் குப்பையை கொட்டி எரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story