ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் கருடசேவை

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் கருடசேவை

கருட சேவை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நடைபெற்றன. முன்னதாக மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவர் ரங்கநாத பெருமாள் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

Tags

Next Story