மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்..!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்..!

ஆட்சியர் அலுவலகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 29.11.2023 அன்று நடைபெறவுள்ளது.

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் மாதம் 29 - ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கங்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம். மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்- 1 உடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே இச்சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெற தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story