தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் 

தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாவட்ட ஆட்சிதலைவரை தலைவராக கொண்டு இயங்கிவரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் தற்காலிக பதவியிடத்திற்கு விண்ணப்பிகலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

1 வருட கால பதவியிடத்திற்கு 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிகலாம் என்றும் மாத ஊதியமாக 13,240 ரூபாய் வழங்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தோர் ariyalur.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து டிசம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம்,

அரசு,பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது

Tags

Next Story