ராமநாதபுரத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கல்

ராமநாதபுரத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொண்டு சிறந்த பணியாளர்களுக்கான பாராட்டுச்சான்று மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு வழங்கினார்.

ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று (01.12.2023) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம் உலக எய்ட்ஸ் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையேற்று பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் பாதுகாப்புடன் பொதுமக்கள் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனையொட்டி இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு துறையின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுவாக ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். சமுதாயத்தில் பாகுபாடு என்பது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தி காட்டுவதை தடுக்க வேண்டும் என்பதே ஆகும். ஆதலால் முதலில் விழிப்புணர்வு என்பது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிட கூடாது. இந்நோய் என்பது கட்டுக்குள் இருக்கக்கூடிய தொற்று நோயாகும். இந்த நோய்க்கான சிகிச்சைகளை தமிழக அரசு போதியளவு வழங்கி வருகின்றது. மேலும் சுகாதாரத்துறையுடன் தொண்டு நிறுவனங்கள் இணைந்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு அவர்கள் தெரிவித்தார்.

பின்னர் உலக எய்ட்ஸ் தினம் 2023-ஜ முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலம் பொதுமக்களிடையே எய்ட்ஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்ட பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்று மற்றும் நினைவு பரிசு வழங்கியதுடன பின்னர் " சமபந்தி போஜனம் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார் சுகாதார பணிகள் மற்றும் எய்ட்ஸ் காட்டுபாட்டுத்துறை துணை இயக்குநர் அஜித் பிரபு குமார் சமூகம் மற்றும் குடும்ப மருத்துவத்துறை பேராசிரியர் பிரவினா தயா துணை இயக்குனர்கள் ரவிச்சந்திரன் அவர்கள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் முருகேசன் மாவட்ட வள அலுவலர் முத்துமாரி மருத்துவ அலுவலர் மரு.பாத்திமா பதுல் ராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட

Tags

Next Story