எடப்பாடி பகுதிகளில் நாய்களின் அட்டகாசத்தால்,தொடரும் ஆடுகளின் இறப்பு

எடப்பாடி பகுதிகளில் நாய்களின் அட்டகாசத்தால்,தொடரும் ஆடுகளின் இறப்பு அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெறிநாய் அட்டூழியத்தால் ஆடுகள் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி அடுத்த மேல்சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் அவரது மனைவி நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான ஆட்டு பட்டியில் 18 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று நள்ளிரவில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறிநாய் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்தது கொதறியது இதில்8 ஆடுகள் இறந்துவிட்டன மேலும் 10 ஆடுகள் காயம் அடைந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சித்தூர் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்து வெறி நாய்களை பிடிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர்.

Tags

Next Story