பெண்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

பெண்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் 3 மாதமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 10க்கு மேற்பட்ட பெண்கள் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் எங்கள் குடும்பத்திற்கு அதிகமாக வருமானம் இருப்பதாக கூறி எங்கள் மனுவை தள்ளுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் நாங்கள் அனைவரும் தினக்கூலி வேலை செய்து வருவதாலும் இதனால் வருமான பற்றாக்குறையால் பெரிதும் கஷ்டப்படுவதால் எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மகளிர்க்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என 10க்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story