முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்த அதிமுகவினர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை அதிமுகவினர் அனுசரித்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கலாநிதி ஒன்றிய கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம் கண்ணன் மச்ச ராஜா, நகரக் கழகச் செயலாளர் முகமது நையினார், நகரக் கழக துணைச் செயலாளர் பா. கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story