செய்யாறு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு

செய்யாறு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட செய்யாறு ஆரணி கூட்டுறவு பகுதியில் நகர செயலாளர் கே வெங்கடேசன் தலைமையில் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் தெற்கு ஒன்றியம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் வடக்கு ஒன்றியம் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஜெயலலிதா திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். திருவத்தூர் பகுதியில் வார்டு கழகத்தின் சார்பில் திருவுரு படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அனக்காவூர் கிழக்கு மற்றும் மேற்கொண்டியை சார்பில் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பாராசூர் கூட்டு ரோட்டில் தெற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட மகளிர் அணி ராணி பெருமாள் தலைமையில் ஜெயலலிதா திருவாரூர் படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வுகளில் ஒன்றிய செயலாளர்கள் அரங்கநாதன் மகேந்திரன் குணசீலன் துரை ஆகியோர் கலந்து கொண்டனர் அதிமுக கழக சார்பில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் அருணகிரி ஜனார்த்தனன் தணிகாசலம் சுரேஷ் எழில் வக்கீல் குப்புசாமி பிரகாஷ் சுதாகர் மகாதேவன் ஜெபாஸ்டியன்துரை, திருச்சிற்றம்பலம் பாலாஜி சேகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை அருண் ஆகியோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்

Tags

Next Story