பாபர் மசூதி இடிப்பு தினம்: நாகர்கோவிலில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் 

பாபர் மசூதி இடிப்பு தினம்: நாகர்கோவிலில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் 
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஓட்டி நாகர்கோவிலில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபர் மசூதியை கட்டித்தரகோரி நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சையத் அலி வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர் முகைதீன் நாகூர் மீரான், சாலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஷபீக் அகமது, மாவட்ட பேச்சாளர் முகமது ஃபாரூக், மாவட்டத் துணைத் தலைவர் ஜாகிர் உசேன் மாவட்ட பொருளாளர் மணவை சாதிக் அலி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜெகபர் அலி நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story