திருப்பத்தூர் மாவட்டம் இரு சடலம் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் இரு சடலம் மீட்பு

 ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் ஒரே நாளில் கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டன.

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் ஒரே நாளில் கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் ஒரே நாளில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரு சடலங்கள் மீட்பு! ஆம்பூர் அருகே உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்ட நபர் கிணற்றில் குதித்து தற்கொலை! அதே போல் வாணியம்பாடி அருகே காணாமல் போன நபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேலு (45) இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், வேலு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது, இதனால் அதிக மன உளைச்சலில் இருந்த வேலு இன்று மாலை அதே பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்,

பின்னர் இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர், 3 மணி நேரப்போராட்டத்திற்கு பிறகு வேலுவின் உடலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர், இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்நிகழ்வு குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். அதேபோல் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி என்பவர் கடந்த 10.12.2023 அன்று வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட அம்பலூர் காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து லோகேஷ் உயிரிழந்தது குறித்து அம்பலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்..

Tags

Next Story