அரியலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் டிசம்பர் 16 ஆம் தேதியன்று பராமரிப்பு பணிகள் நடைப்பெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கபட்டுள்ளது.

அதன்படி அரியலூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அரியலூரின் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கதடிமேடு, வாலாஜாநகரம் உள்ளிட்ட 30 கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் தேளூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கிராமங்களான கைகாட்டி, தேளுர், காவனூர், அம்பாபூர், நாச்சியார்பேட்டை உள்ளிட்ட 25 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story