கூட்டுறவு வங்கியில் திடீர் தீ விபத்து பரபரப்பு

கூட்டுறவு வங்கியில் திடீர் தீ விபத்து பரபரப்பு

தீயணைப்பு துறையினர் 

கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று திடீரென புகை விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோட்டில் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள மின் சாதனங்கள், பேட்டரி அருகே திடீரென புகையத் தொடங்கி, அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.

இதனால், வங்கி ஊழியா்கள் வெளியே ஓடி வந்தனா். தகவலின் பேரில், மின்வாரிய ஊழியா்கள் சென்று மின் இணைப்பைத் துண்டித்தனா்; கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று புகையைக் கட்டுப்படுத்தினா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story