குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 17ஆம் தேதி முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. ஐந்தருவியில் மட்டும் நீா்வரத்து குறைந்ததால் கடந்த மூன்று தினங்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சீற்றம் தணிந்ததையடுத்து தடை விலக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பேரருவியில் அருவியின் மையப்பகுதிக்குள் யாரும் செல்லமுடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தியப் பின் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

Tags

Next Story