மதுபான கடைக்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

மதுபான கடைக்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

மதுபான கடைக்கு எதிர்ப்பு

சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் மீண்டும் மதுபான கடை அமைக்க கூடாது என கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே கண்டரமாணிக்கம் மற்றும் வெளியாத்தூர் ஊராட்சியில் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே மதுபான கடை செயல்பட்டு வந்த நிலையில் இப்பகுதியில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு மக்களின் போராட்டத்தால் செயல்பட்டு வந்த மதுபான கடை அகற்றப்பட்டது. இந்நிலையில் அதே இடத்தில் மதுபானக் கடை செயல்பட அனுமதி அளித்துள்ளதால், இப்பகுதியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், மேலும் பெண்கள் குழந்தைகள் அச்சத்துடன் கடந்து செல்லும் அவலநிலை ஏற்படும், எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்க அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Tags

Next Story