கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 27 ஆம் தேதி (புதன்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story