ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - எஸ்.பி., எச்சரிக்கை

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - எஸ்.பி., எச்சரிக்கை

 எஸ்.பி., பிரதீப் 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டம் பெயரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எஸ்.பி., பிரதீப் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., பிரதீப் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாக கொண்டாட வேண்டும். இன்று இரவு பொது இடம், ரோடுகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.நாளை அதிகாலை 1:00 மணிக்கு மேல் பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மது அருந்தி யாரும் வாகனம் ஓட்டக்கூடாது என்றார்.

Tags

Next Story