கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் சிறையில் அடைப்பு

கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் சிறையில் அடைப்பு

கைதான வாலிபர் 

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கின் குற்றவாளியான, ஆலத்தூர் வட்டம், திருவளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை என்கிற சந்திரசேகர், என்பவர் மகன் கார்த்திக் என்கிற கார்த்திகேயன்.

இவர் நீதிமன்ற பிணையில் சென்றவர், பின் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் குற்றவாளி கார்த்திகேயன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பெரம்பலூர் நீதிமன்றத்தால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

இதன்படி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை ஜனவரி 4ஆம் தேதி கைது செய்து வழக்குப்பதிவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஜனவரி 5ம் தேதி இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து நீதிமன்ற பிடிக்கட்டளையை நிறேவேற்றியுள்ளனர்.

Tags

Next Story