ஆசிரியர் அடித்ததால் மாணவனின் காதில் ரத்தம் வடிந்தது போலீசார் விசாரணை

ஆசிரியர் அடித்ததால் மாணவனின் காதில் ரத்தம் வடிந்தது போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கவுசிக்குமார் (வயது13) என்ற மாணவன் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவனை ஓவிய ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் மாணவனுக்கு காதில் ரத்தம் வடிந்துள்ளது. இதையடுத்து மாணவன் கன்னங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றுள்ளான். மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவனின் பாட்டி விஜயலட்சுமி கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story