கெங்கவல்லியில் அறங்காவலர்கள் நியமனம்

கெங்கவல்லியில் அறங்காவலர்கள் நியமனம்
கோப்பு படம் 
கெங்கவல்லியில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அறங்காவலர் குழு தலைவர் ஆறுமுகம், உறுப்பினர் சிட்டிபாபு ஆகியோர், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கத்திடம் வாழ்த்து பெற்றனர்:கெங்கவல்லி பேரூராட்சி கைலாசநாதர் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலுக்கான அறங்காவலர் தலைவராக ஆறுமுகம், அறங்காவலர் உறுப்பினராக சிட்டிபாபு, உமாமகேஸ்வரி ஆகியோர், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையொட்டி பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு திடலில் உள்ள அலுவல கத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கத் திடம், புதிதாக நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் மற்றும் உறுப்பினர்கள், சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், அவைதலைவர் கருணாநிதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

பொதுக்குழு உறுப்பினர் சந்திரமோகன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் தங்கபாண்டியன் மற்றும் பிரவின், தன தலைமைகழக பேச்சாளர் இளங்கோ ஆகியோர் உட னிருந்தனர்.

Tags

Next Story