கால்வாயில் விழுந்த கன்று குட்டி மீட்பு

கால்வாயில் விழுந்த கன்று குட்டி  மீட்பு


செய்யாறில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த கன்று குட்டியை பொதுமக்கள் மீட்டனர்.


செய்யாறில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த கன்று குட்டியை பொதுமக்கள் மீட்டனர்.
செய்யாறில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்று குட்டியை பொதுமக்கள் காப்பாற்றினர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மண்டி தெருவில் சாலை வழியாக சென்று கொண்டிருந்த சங்கர் என்பவரின் கன்று குட்டி நிலை தடுமாறி கழிவுநீர் கால்வாயில் நேற்று இரவு விழுந்துள்ளது இரவு முழுவதும் யாரும் கவனிக்காத நிலையில் காலையில் கன்று குட்டிக்கு சொந்தக்காரரான சங்கர் கன்று குட்டியை தேடி வந்த போது மண்டி தெரு பகுதியில் உள்ள ஒரு சிறிய கழிவு நீர் கால்வாயில் கன்று குட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின்னர் அவர்கள் வருவதற்குள்ளாகவே பொதுமக்கள் சேர்ந்து கன்று குட்டியை மீட்டனர் இரவு முழுவதும் கழிவுநீர் கால்வாயில் இருந்ததால் உடனடி சிகிச்சை செய்ய கன்று குட்டிக்கு சொந்தக்காரரான சங்கர் ஆட்டோவில் ஏற்றி எடுத்துச் சென்றார்.

Tags

Next Story