காங்கேயம் நகராட்சியில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைப்பு

காங்கேயம் நகராட்சியில் புதிய பேருந்து சேவை:  அமைச்சர் துவக்கி வைப்பு

புதிய பேருந்து சேவை துவக்கம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கொடுமுடி-கோபி வழிதடத்தில் முத்தூர், காங்கேயம், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி மற்றும் குன்னத்தூர் வழியாகவும் பொள்ளாச்சி- கரூர் வழித்தடத்தில் குடிமங்கலம், தாராபுரம், மூலனூர் மற்றும் சின்ன தாராபுரம் வழியாக செல்லும் புதிய பேருந்துகள் சேவையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் கொடியைசைத்து துவக்கி வவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், பொது மேலாளர் (தமிழ்நாடு போக்குவரத்து கழகம்) மாரியப்பன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story