தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்து கொண்ட காவலர்கள்!

மகாத்மா காந்தி நினைவு தின உறுதிமொழி கோவை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது.
கோவை:மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று தீண்டாமை ஒழிப்பு தினமாக அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுகொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது. இதில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story