ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்  கைது

பைல் படம் 

முத்துப்பேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாச்சிகுளம் மெயின் ரோடு பகுதியில் ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருத்துறைப்பூண்டி நாடார் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் ஆனந்த் வயது 44 என்பவரை போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த முத்துப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார் . மேலும் இது போன்று பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ் பி எச்சரித்துள்ளார்.

Tags

Next Story