நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தை திடீர் ஆய்வு

நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தை திடீர் ஆய்வு

திடீர் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேளாங்கண்ணிக்கு சென்று பார்வையிட்டு பின்பு வேளாங்கண்ணி காவல் நிலையத்தை திடீர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் தமிழக முதலமைச்சரின் *உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் வேளாங்கண்ணி பகுதியில் தமிழக அரசாங்கத்தால் புதிதாக கட்டப்பட்டிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேலைகளை மாவட்ட ஆட்சியர் ஜானிடம் வர்கீஸ் டன் இணைந்து பார்வையிட்டார்கள் . பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள் அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் முறையாக உள்ளதாய் என ஆய்வு செய்தார்கள், மேற்படி காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியதுடன், இரவு நேரங்களில் அதிகப்படியான காவலர்களை ரோந்து அமர்த்தவும், யாரேனும் சந்தேகிக்கும் படி இரவில் சுற்றித்திரிந்தால் அவர்களை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்கள்.

Tags

Next Story