டூவீலர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து - வாலிபர் படுகாயம்

டூவீலர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் - காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் வயது 40. இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இரவு 8 மணி அளவில், திண்டுக்கல்- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் காக்கவாடி பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே வந்தபோது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று சந்திரன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த சந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு,தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்து ஏற்படும் வகையில் மோதி விட்டு, நிற்காமல் சென்ற வாகனம் எது? அதனை ஓட்டிச் சென்ற நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story