குழந்தையை தூக்கிச் சென்ற இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல்

குழந்தையை தூக்கிச் சென்ற இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல்

குழந்தையை அழைத்து சென்ற இளைஞர்

மணப்பாறை பேருந்து நிலையம் அருகே குழந்தையை மதுபோதையிலிருந்த இளைஞர் கடத்தியதாக நினைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

மணப்பாறையை அடுத்த டி. சுக்காம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மனைவி அனிதா (23). தனது 2வயது பெண் குழந்தையுடன் வெள்ளிக்கிழமை மணப்பாறை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அனிதா, அருகிலிருந்த இளைஞரிடம் குழந்தையை அளித்து விட்டு டீக்கடையில் குழந்தைக்காக பால் வாங்கினாராம்.

அப்போது, மதுபோதையிலிருந்த அந்த இளைஞர் 2 வயது குழந்தையுடன் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தையை அந்த இளைஞர் எடுத்து செல்வதாக நினைத்து அனிதா கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர்.

தகவலறிந்து அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் லியோனியா தலைமையிலான போலீஸார், அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த இளைஞர் சேலம் அடுத்த பூக்கார வட்டம் மாணிக்கம் மகன் சக்திவேல் (29) என்பதும் மதுபோதையில் இருந்ததால் குழந்தையை தூக்கி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.

Tags

Next Story